தைப் புத்தாண்டு
தமிழா தமிழா உணர்ந்திடு
தைதான் நமக்கு புத்தாண்டு
குமிழாய் போன ஆண்டொன்றை
குறித்து நீயும் கலங்காதே
அமிழ்தாய் இனிக்கும் பொங்கலை
அள்ளிக் கொடுத்து மகிழ்ந்திட
உமியை கலைந்த புத்தரிசி
உலையில் இட்டு பொங்கிடு
கன்னல் கரும்புச் சாற்றைநீ
கனிவாய் சுவைக்கக் கொடுத்திடு
இன்னல் நீங்கி மகிழ்ந்திட
இன்றே முடிவை எடுத்திடு
நன்னாள் தையில் அனைவரும்
நலமாய் வாழச் சொல்லியே
அன்னைத் தமிழைக் கொண்டுநீ
அனைவரும் வாழ வாழ்த்திடு
பொன். கணேசுகுமார்.
அமிழ்தாய் இனிக்கும் பொங்கலை
அள்ளிக் கொடுத்து மகிழ்ந்திட
உமியை கலைந்த புத்தரிசி
உலையில் இட்டு பொங்கிடு
கன்னல் கரும்புச் சாற்றைநீ
கனிவாய் சுவைக்கக் கொடுத்திடு
இன்னல் நீங்கி மகிழ்ந்திட
இன்றே முடிவை எடுத்திடு
நன்னாள் தையில் அனைவரும்
நலமாய் வாழச் சொல்லியே
அன்னைத் தமிழைக் கொண்டுநீ
அனைவரும் வாழ வாழ்த்திடு
பொன். கணேசுகுமார்.