ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

தும்பிகளின் வெளி.

இதயங்களை கிழித்து வைத்து கொள்ளலாம்
ஒழிகியோடும் குருதிப் புனலில்
கெக்கெலிக்கலாம்
ஓரினக் கூட்டத்தின்
வெற்று வெற்றி ஓலம்

யாரும் முன் நிறுத்த முடியாத செயல் கூட்டில்
எங்கும்
விரவி கிடக்கும் மனப் புழுக்கம்
ஈரம் காய காலக் கெடு
அறுதியிட்டு கூற இயலாது

சேர்த்து கையிறுக்கி சொல்லுவோம்

எந்தப் போரும் வாழ்வை திருத்தி அமைக்காது

கை கால் இழந்த உயிரிகளை
பூமியெங்கும் சிதறி வைக்கும்.

எம்.கருணாகரன்


கவிஞர் கருணாகரன் அவர்களின் தும்பிகளின் வெளி என்னும் கவிதை பற்றிய என் எண்ண வெளிப்பாடுகள்.
கவிஞர் கருணாகரன் அவர்களின் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் ஆசையின் வெளிப்பாடாக மட்டுமல்ல இவ்வுலக வாழ் மனிதர்களில் பெரும்பாலனோரின் ஆசையாகவும் இந்தக் கவிதை வரிகளை வடித்துள்ளார். இந்த உலகில் எத்தனையோ இனங்கள் இருந்தாலும் அவ்வினங்களில், இக்கருத்தினைச் சொல்ல நம் தமிழினத்திற்கு மட்டும்தான் அதிக அனுபவம் இருக்கிறது. ஏனென்றால், நம் இனம் பட்ட வலிகளும் வேதனைகளும் ஏராளம் ஏராளம். நம் இனத்தார் யாம் பெற்ற இன்பத்தை மட்டுமே மற்றவர் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவர். ஆனால், தான் பெற்ற துன்பத்தை மற்றவர் அனுபவிக்க எண்ணார். எனவேதான் நம்மினக் கவிஞருக்கும் அந்த எண்ணம் தோன்ற போரினால் ஏற்படும் விளைவுகளைக் கவிதையாய் வடித்துள்ளார். கவிஞருக்கு என் நன்றியுடன் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.
இப்படிக்கு,

கணேசுகுமார் பொன்னழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக