ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

                 பெண் 
நேற்று இன்று நாளை 


அன்று...


கல்லூரிப் பருவத்தில்

      கனவென்னும் நித்திரையில்

உல்லாசப் பார்வையாலே

      உலாவந்த பெண்ணணங்கே


இன்று...


வாழ்வென்னும் சோலையிலே

      வசந்தத்தைப் பரப்பிடவே

சூழ்கொண்ட மலராகச்

      சுற்றிவரும் பைந்தொடியே 


நாளை...


களைப்புற்ற சந்ததிக்குக்

கனியோடு தண்ணிழலும்

அளிக்கின்ற தருவாக


      அமைந்திட்ட அன்புருவே



கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக