திங்கள், 15 அக்டோபர், 2018

கண்ணதாசன் வெண்பா 2


மெட்டுக்குப் பாட்டெழுத முன்னெடுக்கும் நேரத்தில்
கட்டுக்கு ளில்லாத  காட்சிகளும் - வெட்டிவைத்த
சித்திரமாய்ச் சீர்பெற்று, சந்தமற்ற சொற்கூட

முத்தான பாட்டாகும் பார்.



தென்பொதிகைத் தென்றலிலே கால்பதித்த வாழ்வியலைத்
தன்பதிப்பாம் தென்றலிலும் தக்கதொரு - முன்னுரையாய்
மென்படுத்திக் கற்பவரும் கேட்பவரும் பண்படவே
கண்ணதாசன் செய்தார்  கவி.


குன்றொத்த வீடும் குறைவில்லா செல்வமும்
நன்றெனச் சொல்லும் நலமான வாழ்க்கையும்
கொண்டாரும் கொள்ளாரும் பாரினி லுண்டெனக்
கண்ணதாசன் பாடினார்நற் பா.



அகமும் புறமும் அமைந்திட்ட வாழ்வைப்
பகுத்தறிவு சிந்தையுள் பாடிச் - சுகமான
சந்தமோடு நல்லறமும் சாற்றியே தந்திட
முந்திடுவார் முத்தையா பார்.



கொஞ்சுதமிழ்ச் சொற்களோடு சிந்தனையும் சேர்ந்திருக்க
பஞ்சு அருணாச் சலமும் துணையிருக்க
விஞ்சுகின்ற கற்பனையில் வித்திட்ட பாட்டுகளை
நெஞ்சினிக்கத் தந்திட்டார் கேள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக