வியாழன், 25 அக்டோபர், 2018



ஜீவா! ஜீவா! ஜீவா!

கண்கொண்டு பார்க்குமுன்னே
     காரிருள்தான் வந்ததென்ன? -  ஜீவா
உண்மையுள்ள இளையவன்நீ
     உலகைவிட்டு போனதென்ன?

உதிராத உறவாக
     ஊர்கூடி வாழ்ந்தாலும் - ஜீவா
மதியாட வைத்துவிட்டு
     மறைந்துநீ போனதென்ன?

நேற்றுவரை வாழ்ந்தஉன்
     நினைவோடு வந்தசோகம் - ஜீவா
காட்டாற்று வெள்ளம்போல்
     கரைபுரண்டு ஓடுதைய்யா

எண்ணத்தை இழையவிட்டு
     எங்குநாம் பார்த்தாலும் - ஜீவா
கண்ணத்தை நனையவைக்கும்
     கண்ணீர்தான் பெருகுதைய்யா

ஆண்டொன்று போனதென்று
     அடுத்தவர்கள் சொன்னாலும் - ஜீவா
மீண்டுமொரு பிறவியோடு
     வீடுவந்து சேருமைய்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக