புதன், 29 டிசம்பர், 2021

 

சுப அருணாசலம் நினைவுப் பாட்டுப் போட்டி

பாடல் 1

மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு

மரணத் தொற்றை மாய்த்து வெல்லு

தனிமைப் படுத்தி வாழும் வாழ்வைத்

தகர்த்து எறியும் வழியைச் சொல்லு

 (மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

கொரோனா வென்னும் கொடுங்கிருமி தன்

கோரப் பல்லால் குருதி குடிக்க

மரணம் எண்ணும் மாயைப் பிடியில்

மாய்ந்து போகலாமா? மனிதா மாய்ந்து போகலாமா?

(மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

அம்மை காலரா சார்ஸ் டெங்கியென

அனைத்தையும் வென்ற மனிதா! இன்று

வெம்மைத் தொற்றாம் கொரோனாவை எண்ணி

விரக்திக் கொள்ளலாமா? மனிதா விரக்திக் கொள்ளலாமா?

(மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

விஷத் தொற்றை விரட்டி யடிக்கும்

வீரிய மருந்தைக் கண்டுபிடிப்போம் மனிதா

வீட்டி லிருந்தோ விலகி யிருந்தோ

வெகுதூரம் துரத்திடுவோம் மனிதா வெகுதூரம் துரத்திடுவோம்

(மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

மூக்கில் நுழைந்து நெஞ்சம் புகுந்து

மூச்சைப் பிடிக்கும் முரட்டுத் தொற்றைத்

தாக்கி யழிக்கும் மருந்து கொண்டு 

தடமின்றித் துடைத்திடுவோம் மனிதா தடமின்றித் துடைத்திடுவோம்

(மனிதா! மனிதா! கொஞ்சம் நில்லு...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக