புதன், 29 டிசம்பர், 2021

 பாரதியும் தமிழும்

 

எட்டை யாபு ரமாண்டுவந்த

இனிமை நிறைந்த மன்னரிடம்

எட்டு வயதில் ஏடெடுத்து

இயற்றிச் சொன்னத் தமிழ்ப்பாவைக்

கிட்ட யிருந்து கேட்டோரும்

கிறங்கி யங்கு மகிழ்ந்திடவே

பட்ட மொன்று வழங்குகின்றார்

பார தியெனப் போற்றுகின்றார்

 

எட்ட நின்று யோசித்து

ஏற்ற மிக்கச் சொற்கொண்டு

பட்ட பாடு பகர்ந்திடவே

புதுமை நோக்கில் பாடிட்டார்

வெட்டுக் கத்திக் கூர்மைபோல

வினவு கின்ற மொழிகொண்டு

கொட்டி வைத்த பாட்டாலே

கொள்கை முரசு கொட்டிட்டார்

 

மண்ணில் வாழும் மக்களுக்கு

மாண்பு மிக்க வாழ்வுவேண்டி

எண்ண மென்னும் ஏற்றத்தால்

எழுச்சி கொண்டே எழுதிட்டார்

கண்க ளுருட்டிக் காட்டுகின்ற

கடுமை நிறைந்த பார்வையாலே

பெண்ணி னத்தின்  விடுதலைக்கும்

பெரும்பு ரட்சி செய்திட்டார்

 

கன்னித் தமிழைக் காதலித்துக்

கடைசி வரைக்கும் கைப்பிடித்துக்

சின்னக் குழந்தை பாட்டுகளும்

சீறும் புரட்சிப் பாட்டுகளும்

கண்ணன் காதல் பாட்டுகளும்

காலம் மறவாக் காவியமும்

பண்ண மைந்த யிசையாலே

பாடி நமக்குத் தந்திட்டார்             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக