வெள்ளி, 3 மார்ச், 2023

 பொங்கல் வாழ்த்து!


வானூரும் செங்கதிரோன்

              வையமெல்லாம் வலம்வரவும்

ஊனூறும் உயிர்களுக்கும்

              உணவளித்து உய்வதற்கும்

தானூரும் தன்னிழல்போல் 

              தைமாதம் முதல்நாளில் 

கோனூரும் தேரேறி

              குடதிசையில் நேருதிக்கும்  


வானூரும் இளம்பரிதி

              வார்க்கடலில் நீரெடுத்து  

மேனூரும் மேகமாகி

              மழையாகப் பொலிந்திடவே

மீனூரும் ஆறுகளும்

               மிகையாகப் பாய்ந்தோடி 

மானூரும் நிலமெங்கும்

              மகசூழைப் பெருக்கிவிடும்


தேனூரும் பூக்களாகத்

               திக்கெட்டும் மணம்பரப்பி

காணூரும் காட்சிகளாய்க்

               கண்களுக்கு விருந்தளிக்கும்

தீனூரும் எண்ணங்கள்

               தினந்தோறும் வந்தாலும்

தானூறும் தண்ணீர்போல்

               தைநாளில் தணித்துவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக