வியாழன், 4 ஏப்ரல், 2024

 

லீ குவான் யூ

கங்குகரை யேதுமில்லா

கடல்சூழ்ந்த தீவுதனைச்

சிங்கையென்னும் நாடாகச்

சீர்தூக்கிச் சிறப்பாக்கி

எங்குமுள்ள நாட்டினரும்

இங்குவந்து பணிசெய்ய

தங்கநிகர் தரத்தோடு

தரணியிலே தவழவிட்டார்

 

பங்குனியும் சித்திரையும்

பாதிபாதி கலந்தேதான்

சங்கமிக்கும் கோடையிலும்

தீஞ்சுவையாய்த் தித்திக்கும்

பொங்குதமிழ் புலமையினைப்

புவியோர்கள் போற்றிடவே

தங்குதடை யேதுமின்றித்

தமிழுக்கே இடம்தந்தார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக