திங்கள், 29 ஜூன், 2015




புத்தாண்டு வருகுதுபார்

புத்தாண்டு வருகுதுபார் தமிழ்

      புத்தாண்டு வருகுதுபார்

முத்தான தை’யினிலே தமிழ்

      முடிசூடி வருகுதுபார்


எண்ணமதில் குடிகொண்ட உயர்

      இனியதமிழ்ப் பாட்டோடு

பண்பாட்டுப் பெட்டகமாய் தைப்

      பொங்கலன்று வருகுதுபார்

நன்செய்யுள் திருக்குறளை உயர்

நாடுபோற்ற செய்ததமிழ்

பொன்னாண்டைக் கூட்டியிங்கு உயர்

புதுப்பொலிவு தருகுதுபார்

கன்னித்தமிழ் வையகத்தில் உயர்

      கலைகள்பல கொண்டிங்கு

வண்ணத்தமிழ்ப் புத்தாண்டாய் உயர்

      வையகத்தில் வருகுதுபார்

நன்னாளாம் புத்தாண்டில் உயர்

      நல்லவர்கள் வாழ்த்திடவே

என்னாளும் பொன்னாளாய் உயர்

      ஏற்றமுடன் வருகுதுபார்

                        பொன். கணேசுகுமார்

                        சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக