புதன், 3 பிப்ரவரி, 2016


ஆசிரியர்


பள்ளிக் கல்விப் பணியிலே

        பாங்காய் சேவை செய்பவர்

நல்லத் தமிழை வளர்க்கவே

        நாளும் பயிற்சி கொடுப்பவர்


கல்வி கற்கும் பிள்ளைகள்

        கருத்தாய் பாடம் கற்கவே

நல்ல எளிய பயிற்சியை

         நாளும் செய்யச் சொன்னவர்


உள்ளம் நிறைந்த மகிழ்வுடன்

        உயர்ந்த அறிவுக் கதைகளை

கள்ள மில்லா பிள்ளைக்கு

        கனிவாய் சொல்லிக் கொடுப்பவர்


எம்மைப் போன்ற பிள்ளைகள்

        ஏற்றம் கொண்டே உயர்ந்திட

இம்மை வாழ்க்கைப் பாடத்தை

         இனிதாய் சொல்லிக் கொடுப்பவர்


உண்மை பொய்மை யாதென?

        உணர்த்தச் சொல்லும் கேள்வியில்

நன்மை தீமை இவையென

          நன்றாய் விளக்கிச் சொல்பவர்


நம்மை உயர்த்த உழைத்திடும்

         நல்ல ஆசிரியச் சான்றோர்க்கு

 நம்மால் இயன்ற வாழ்த்தினை

          நாளும் சொல்வோம் போற்றியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக