திங்கள், 29 ஜூன், 2015


 
அவர்தாம் பெரியார்

பகுத்தறிவு பகலவராம்

      பார்போற்றும் தூயவராம்

வகுத்தநெறி வழுவாது

      வாழ்ந்திட்ட பெரியவராம்

 
அறியாமை இருளகற்ற

      ஆண்டவனை மறுத்தவராம்

வறியோரைச் சுரண்டுகின்ற

      வஞ்சகரைப் பழித்தவராம்

 
பெண்ணடிமை விலங்கொடிக்க

      பெரும்புரட்சி செய்தவராம்

தன்னவளை முன்னிருத்தி

      சமதர்மம் புரிந்தவராம்

 
வன்மனத்தார் சடங்கினையே

      வரம்பின்றி எதிர்த்தவராம்

தன்மான உணர்வுதனை

      தமிழருக்குக் கொடுத்தவராம்

 
சிங்கநிகர் ஆற்றலினால்

      சிறுமைகளைத் துடைத்தவராம்

தங்கநிகர் கொள்கைகளைத்

      தரணியெங்கும் விதைத்தவராம்

 
வெண்தாடி வேந்தரென

      வெகுமானம் பெற்றவராம்

பண்பாடிப் போற்றுகின்ற

      பரம்பொருளே பெரியாராம்

                                          பொன். கணேசுகுமார்

                                          சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக