புதன், 6 மே, 2015

அன்னை!

அன்னை! அன்னை! அன்னை!
      அன்பு செலுத்தும் அன்னை!
என்னை, உன்னைக் காக்கும்
      இறைவன் போன்ற அன்னை!

என்னைப் போல யாவரும்
      இனிதே மகிழ்ந்து வாழ்ந்திட
அன்னை! என்றச் சொல்லை
      அன்பாய்ச் சொல்வாய் நாளும்

அன்னை! என்றச் சொல்லே
       அமைதி காணும் இன்பம்
என்றும் இதனைச் சொல்ல
       இன்பம் தோன்றும் நாளும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக