செவ்வாய், 1 மே, 2018


காதல் என்பது யாதெனில்... 24/04/2018


காதல் என்பது யாதெனில்...

கட்டிளம் காளையர்க்கும்

கருவிழி காரிகைக்கும்

மொட்டிளம் பூவாய்

முருவலிக்கும் உணர்வு


காதல் என்பது யாதெனில்...

உன்னுள் நானும்

என்னுள் நீயும்

இடமா றியதாய்

ஓர் உணர்வு


காதல் என்பது யாதெனில்...

நானும் நீயுமாய்க்

காணும் காட்சியில்

சுவைக்கும் சுவையில்

மாற்றமில்லா உணர்வு


காதல் என்பது யாதெனில்...

கண்டவர் இரந்து

கொண்டவர் சுரந்து

கொடுக்கும் அன்பைப்

பரிமாறும் உணர்வு


காதல் என்பது யாதெனில்...

முகம்காணா போதும்

மூச்சுவிடும் பொழுதும்

அகம்கொண்டு பேசும்

அன்புடை நெஞ்சம்


ஆதலால்...

ஆதலால்...

காதல் கொண்டு

காதல் கொண்டு

சாதல் வந்தும்

காதல் செய்வீர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக