செவ்வாய், 1 மே, 2018


தலையில்லா வீரன் 29/04/2018


நெஞ்சுக் கூட்டிலே வீரம்சொரிய

பிஞ்சுக் கரத்திலே வாளேந்தி

அஞ்சாமை யென்னும் உரமேற்றி

வஞ்சகர்முன் போர் செய்தயோ


களமாடும் வேளையிலே உந்தன்

தலைகீழ் நோக்கி வீழ்ந்தாலும்

வலக்கரம் ஏந்தும் வாளால்

குலப்பெருமை காக்க வந்தவனோ


தலையே போன பின்னும்

நிலைதன்னை கொஞ்சமும் மாற்றாது

பரியின் கடிவாளம் பிடித்து

வரிப்புலி வேங்கை போல


வாளெடுத்து சுழற்றும் உன்னை

வாழ்த்தவே வார்த்தை யில்லை

கண்ணை மீண்டும் கண்ணீரால்

வணங்கிடுவே னுந்தன் தாளை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக