திங்கள், 5 அக்டோபர், 2020

 

கலாமாம் எங்கள் கலாமாம்

 

கலாமாம் அப்துல் கலாமாம்

கனவு காணச் சொன்ன

கலாமாம் அப்துல் கலாமாம்

 

உலகோ ரெல்லாம் போற்ற

உயர்ந்த நிலையில் இருக்கும்

உண்மை யான தலைவர்

 

ஏற்றுக் கொண்ட பதவி

ஏற்றம் மிகுந்த தெனினும்

எளிமை யான மனிதர்

 

ஓய்வு பெற்ற போதும்

ஓய்ந்தி ருக்கும் நினைவை

உள்ளம் கொள்ளா மனிதர்

 

பள்ளி தோறும் சென்று

படிப்பின் மேன்மை யுணர்த்திப்

படிக்கச் சொன்ன ஆசான்

 

மழைநீர் வேண்டு மென்றால்

மரங்கள் தேவை யென்ற

மாண்பைச் சொன்ன மனிதர்

 

சின்ன வயது கனவில்

சிறகை முளைக்கச் செய்யும்

சிந்தை வளர்க்கச் சொன்னார்

 

கண்ட கனவை நினைவில்

கொண்டு வந்து காட்ட

கடிதாய் வுழைக்கச் சொன்னார்

 

துன்பம் துரத்தும் போதும்

திரும்பி நின்று பார்த்தால்

தூர வோடும் என்றார்

 

எண்ணும் ஆசை யாவும்

ஏற்றம் மிகுந்த ஒன்றாய்

இருக்க வேண்டும் என்றார்

 

கற்றுக் கொடுக்கும் குருவைக்

கடவுள் நிலையில் வைத்து

கைகள் கூப்பச் சொன்னார்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக