ஞாயிறு, 4 அக்டோபர், 2020

 

கிழப் பிள்ளையின் குறிப்பேடு

 

இளமைப் பருவம் தூய்ந்திட

      ஈர முதுமை பெற்றதால்

வளமை யான சுரப்பிகள்

      வறட்சி நிலைக்குப் போகவே

வளப்பம் மிகுந்த பார்வையும்

      வரைய றைக்குள் சுருங்கிட

அழகு நிறைந்த மகனுடன்

      அமர்ந்து பேசும் காட்சியில்

 

மழலை மாறா வார்த்தையில்

      மகிழ்ந்து குழைந்து மொழிந்திட

பழகும் பிள்ளைப் பேச்சினைப்

      பருகி யின்பம் துய்க்கையில்

மழலை யன்னக் கேள்வியை

      மாற்ற மின்றித் தொடர்ந்திட

விளக்கம் கூறும் தந்தையும்

      வெறுப்பைக் கக்கும் மகனுமே!

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக