மனிதம் காத்திடுக
(அறுசீர் விருத்தம்)
குயில்கள்
கூவும் வயநாட்டில்
குவிந்து
விழுந்த மழைவெள்ளம்
புயல்போல்
புகுந்து புரட்டியதால்
புல்லும்
பூண்டும் புதைந்து அன்று
குயவன் குழைத்த
கலவைபோல்
குழைந்து
குவிந்து வந்திடவே
வயதும் வரம்பும்
பார்க்காது
வசதி வாய்ப்பும்
வார்க்காது
இயற்கைத்
தாயின் சீற்றத்தால்
இழந்த உயிர்கள்
பலவாகும்
பெயர்ந்து
விழுந்த மண்ணடுக்கில்
பலபேர் இன்னும்
புதைந்துள்ளார்
பயந்து நடுங்கும்
மக்களிடம்
பாரா முகமாய்
இருப்பதேனோ
முயன்று
விரைவில் முதலுதவி
முடித்தே மனிதம் காத்திடுக
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக