வெள்ளிவிழாக்
காணும் கவிமாலைக்கு வாழ்த்து!
(எண்சீர்
விருத்தம்)
கண்ணதாசன்
பிறந்தநாளில் கவிமாலை யமைப்பாகக்
காற்கோல்
நடப்பட்டு கவிபாடும் யியக்கமிது
எண்ணத்தை
எழுத்தாக்கி எழுத்துகளைக் கவியாக்கி
இனிமையுடன்
எடுத்தியம்ப ஏற்றதொரு இடமாகிப்
பண்ணமைத்தப்
பாக்களையும் படித்துணர்ந்த நூல்களையும்
பாலகரும்
மாணவரும் பரவசமாய்ப் பகிர்ந்திடவே
எண்ணுகின்ற
இயக்கமாக வெள்ளியாண்டை எட்டினாலும்
இனிதுபல
நூறாண்டுத் தழைத்தோங்க வேண்டுகிறேன்
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக