வெள்ளி, 29 ஜூலை, 2011

16. நாய்

                        நாய்

தாயைப் போல அன்பை
             தனக்கு ஊட்டும் இடத்தில்
சேயைப் போல என்றும்
             சிறப்பு செய்யும் தோழன்

நாயைப் போல நண்பன்
             நமக்கு கிடைத்து விட்டால்
வாய்மை யோடு எங்கும்
             வளர்ச்சி கண்டு வருவோம்

வீட்டைக் காக்க எண்ணி
              விரும்பி வளர்க்கும் நாயை
நாட்டில் உள்ள அனைவரும்
              நட்பு கொள்ள வேண்டும்

குழந்தை போலத் துள்ளி
             குதித்து ஆடும் நாயை
பழமும் சோறும் தந்து
              பாது காக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக