வெள்ளி, 29 ஜூலை, 2011

21. மேகம் தந்த மழை


                 மேகம் தந்த மழை




 
மழையே மழையே வாராயோ
             மண்ணை நனைக்க வாராயோ
உழைப்பை உயிராய் எண்ணிடும்
              உழவர் வாழ வாராயோ

நிலத்தடி நீரை உறிஞ்சி
             நித்தம் குடிக்கும் மேகமே
பலத்தக் காற்றின் உதவியால்
              பலதுளி மழையாய் வாராயோ

ஆறு ஏரி குளமென
              அலைந்து திரியும் மேகமே
ஊரு உலகம் வாழ்ந்திட
               உயர்ந்த மழையாய் வாராயோ

பாவிய விதைகள் முளைத்திட
               பயிர்கள் யாவும் செழித்திட
ஆவியாய் அலையும் மேகமே
               அழகு மழையாய் வாராயோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக