வெள்ளி, 29 ஜூலை, 2011

19. சிங்கப்பூர்

                      சிங்கப்பூர்

நம்ம ஊரு சிங்கப்பூர்
          நாளும் வளரும் சிங்கப்பூர்
சும்மா யாரும் இல்லாமல்
          சுகமாய் வாழும் சிங்கப்பூர்

நேற்று வரைக்கும் நம்முன்னோர்
            நிலத்தில் சிந்திய வியர்வையில்
நாற்று கொடுக்கும் மகசூலாய்
             நலமாய் விளைந்த சிங்கப்பூர்

எல்லா நாட்டு ஊழியரும்
              இங்கு வந்து பணிசெய்ய
நல்ல நல்ல திட்டங்கள்
               நாளும் தீட்டும் சிங்கப்பூர்

வார்த்து எடுத்த வடிவாக
               வானை முட்டும் கட்டிடங்கள்
பார்த்து மகிழ இதுபோல
                பாங்காய் அமைந்த  சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக