வெள்ளி, 29 ஜூலை, 2011

22. மொழி

                                மொழி

நல்ல நல்ல மொழியாம்
           நமக்கு கிடைத்த மொழியாம்
வெல்லம் போல இனிக்கும்
           விரும்பி பேச சுவைக்கும்

அம்மா அப்பா நமக்கு
            அறியச் செய்த மொழியாம்
தம்பி தங்கை பேச்சில்
             சுவையை கூட்டும் மொழியாம்

பல்வகை இலக்கியக் காப்பியம்
              படைக்க வைத்த மொழியாம்
வள்ளுவன் இளங்கோ பாரதி
              வளர்த்து வந்த மொழியாம்

கள்ளம் கபடம் அற்ற
               களிப்பு நிறைந்த மொழியாம்
உள்ளம் கொள்ளை கொண்ட
                உயர்ந்த நம்தமிழ் மொழியாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக