வெள்ளி, 29 ஜூலை, 2011

17. பள்ளி

                           பள்ளி

பள்ளிக் கூடம் போகலாம்
            பாடம் தன்னைப் படிக்கலாம்
துள்ளி ஓடும் வயதிலே
            துன்ப மின்றி வாழலாம்

பரந்து விரிந்தப் பள்ளியில் 
            பார்க்கும் இடத்து அருகிலே 
மரங்கள் சூழ்ந்து நிற்குமே 
             மலர்கள் மணத்தை வீசுமே 

கல்வி கற்கும் வேளையில் 
             கற்றுக் கொடுத்த ஆசானை 
நல்ல எண்ணம் கொண்டுமே 
              நாளும் தொழுது வணங்கலாம் 

பட்டப் படிப்பு யாவையும் 
              படித்து வந்த போதிலும்
கட்டு ஒழுங்கு மீறாமல்
               கவன மோடு இருக்கலாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக