வெள்ளி, 29 ஜூலை, 2011

2. மயில்

மயிலே மயிலே வா வா!
        மயக்கும் இறகை தா தா!
உயிராய் மதிக்கும் நாட்டுக்கு
        உயர்வு தரவே வா வா!

மேகச் சாரல் கண்டு
          மேனி சிலிர்க்கும் மயிலே 
தேகம் எல்லாம் கொண்ட
           தோகை விரித்தே வா வா!

பண்டைத் தமிழர் வாழ்வில்
            பங்கு கொண்ட மயிலே
கொண்டை அழகைக் காட்டி
            கொஞ்சி ஆட வா வா!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக