வெள்ளி, 4 ஜூன், 2021

கவிதை 1 - துயரம் துடைத்து வாழ்வர்

 

எங்கள் நாட்டு வளமே

இங்கு வாழும் மக்கள்

பங்க மில்லா வாழ்வை

பகிர்ந்து வாழ எண்ணி

அங்க மெல்லாம் அழுக்க

ஆழ்ந்து அயர்ந்து உழைத்து

எங்கு மில்லா உயர்வை

ஏற்று நன்றாய் வாழ்வர்

 

கள்ளம் கபடும் இன்றி

கடமை யாற்றி வாழும்

உள்ளம் பெற்ற தாலே

உயர்ந்து நிற்கும் மக்கள்

வெள்ளை மனத்தைப் பெற்று

வந்தோர் போவோ ரிடத்தும்

வள்ளல் தன்மை காட்டி

விரும்பும் வாழ்க்கை வாழ்வர்

 

பள்ளிக் கல்வி தன்னில்

பாடம் கற்கும் பிள்ளை

பள்ளம் மேடு பாரா

பரந்த பார்வை கொண்டு

உள்ள மெங்கும் உழலும்

உண்மைப் பாடம் படித்தும்

துள்ளு மிளமை துடிப்பில்

துயரம் துடைத்து வாழ்வர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக