புதன், 3 பிப்ரவரி, 2016


 அடங்கியதோ உயிர்ப்பசி


நாவாய் மீதேறி செம்படவர்
      நாற்றிசை சென்றிடினும் கடலன்னை
பூவாய் அலைக்கரத்தால் தாலாட்டி
      புத்தெழுச்சி தந்திடுவாள் ஆயின்

ஈராயிரத் தினாலாம் ஆண்டு
      இறுதி வாரந் தன்னில்
ஊரோடு உலக மதிர
      உருவான ஆழிப் பேரலையே

சிறியோர் பெரியோ ரென்று
      சீர்தூக்கிப் பார்க்கா தெங்கள்
உரிமைப் பொருள்க ளென்று
      ஒருநொடியும் எண்ணாது நாங்கள்

கண்மூடித் திறப்பதற்குள் எங்கள்
      கரையோர குடியிருப்பும் உன்னலையால்
மண்மூடிப் போனதால் இன்று
      மாண்ட உயிர்பல வாகும்

தாவி பிடித்து விளையாடிய
      தாய்தந்தையை இழந்தோரும் தங்கள்
ஆவி கொடுத்து வளர்த்திட்ட
      அன்புக் குழந்தையை இழந்தோறும்

உறையும் இடமும் உண்ண
      உணவும் உடுத்தவுடை யும்மறந்து
கரையும் கண்ணோடு உடல்களை
      கடலோரம் தேடி அலைகின்றார்

மானுடத்தின் மதிப்புடை உயிரதனை
      மாபேரலை பறித்துப் போக
காணுகின்ற இடங்களில் எல்லாம்
      கணக்கில்லா உடல்கள் ஒதுங்க

தானேஅவ் வுடலின் சொந்தமென்று
      தாவியோடி அழுதிடும் காட்சி
வீணாய்பப் போனஆழிப் பேரலைக்கு
      விழியில் நீரைத் தாராதோ

ஊழித் தீவினையால் உலக
      உயிர்கள் மீது பாய்ந்திட்ட
ஆழிப் பேரலை யேயின்று
      அடங்கி யதோஉன் உயிர்ப்பசி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக