புதன், 3 பிப்ரவரி, 2016



நண்பனுக்குத் திருமணமாம்

பாலர் பருவம் தொட்டு
      பழகிடும் உயிர்நண் பனுக்குக்
காலை யிங்கு திருமணமாம்
      கண்கள் மிளிரும் குதூகலமாம்

சீனி வாச னோடு
      சேர்ந்தே உள்ளம் மகிழ
ஆனி ஆடி யாகிபின்
      ஆவணித் திங்கள் நாளில்

கோதையர் சுற்றம் சூழ
      குலமகள் குனிந்து நடக்க
மூதாதையர் கூடி யிருக்கும்
      முகூர்த்த சபையின் தன்னில்

மணமகள் அருகில் அமர
      மங்கள வாழ்த்துக் களோடு
குணமகள் வலம்புரி கழுத்தில்
      கட்டு கின்றான் தாலியினை

சந்திர கலா நெற்றியில்
      செந்தூரப் பொட்டு வைத்து
சொந்த மெனஅவள் கரத்தை
      சீனி வாசன் பற்றி

செந்தமிழ் குறளின் முப்பாலாய்
      சேர்ந்து எங்கும் புகழ்பரப்பி
சொந்தம் பந்தம் புடைசூழ
      தினமும் மகிழ்வுடன் நீவாழ

ஆல்போல் குடும்பம் விரிய
      அழகிய குழந்தைகள் நீபெற்று
நாளும் அன்பைப் பொழிந்தே
      நலமாய் வாழ்க வாழ்கவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக