புதன், 3 பிப்ரவரி, 2016


      

வாழ்க வாழ்கவே

தோரணங்கள் தொங்கிடும் மன்றத்தில்
      தோழரோடு சசிக்குமார் வீற்றிருக்க
ஆரணங்காம் விஜயலட்சுமி யைத்தோழியர்
      அவ்விடத்தே அழைத்து வந்தார்

ஊரார் கூடி உளமகிழ்ந்து
      ஒலித்திடும் உன்னத வார்த்தையோடு
பேரறிவு சபையோர் முன்னே, மாப்
      பிள்ளையவன் கட்டுகிறான் திருநாணை

செழுமை நிறைந்த உம்வாழ்வை
      சிறப்புடன் துவங்கி வாழ்ந்திட
குழுமி யிருக்கும் பெரியோர்கால்
      குறள்மொழி முழங்கி வாழ்த்திடுவர்

இனிதே இணையும் ஈருள்ளம்
      எழுச்சி மிகுந்த இன்பத்தால்
கனி,தேன் சுவையாய்க் கலந்துநீவிர்
      களிப்புடன் வாழ்க வாழ்கவே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக