புதன், 3 பிப்ரவரி, 2016



சித்திரையே வா!

புத்தாண்டு வருகுதுபார்
      புதுப்பொலிவு தருகுதுபார்
மத்தாளம் கொட்டியினி
      மகிழ்வோடு இருந்திடவே

பெற்றோர்நம் பிள்ளையென
      பெருவாழ்க்கை வாழ்ந்திட்ட
உற்றார்நல் உறவோடு
      உளமாற வாழ்த்திடவே

தமிழன்னை பெற்றெடுத்த
      தலைமகளாம் தமிழ்மொழியை
தம்மீது தாங்கியவள்
      தரணியிங்கு வந்திடவே

சங்ககால இலக்கியமும்
      சமகால இலக்கியமும்
அங்கமெங்கும் பூட்டிட்ட
      அருந்தமிழை வாழ்த்திடவே

சித்திரத்தைப் போலிங்கு
      சிறப்பான வடிவோடு
சித்திரையாய் வருகின்றாள்
      சீர்கொண்டு தந்திடவே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக