புதன், 3 பிப்ரவரி, 2016


   
பிரிவுத்துயர்

கடலாடும் படகிற்கு – நல்ல
      கலங்கரை விளக்காய்
உடல்மனத் திலாடும் – என்
      உன்னத அன்பிற்கு

காதல் கனவில் – ஒரு
      கருவறை ஒளியாய்
ஓதும் ஆலயத்தில் – தினம்
      ஒலிக்கும் வார்த்தையானேன்

பௌர்ணமி நிலவில் – நிழல்
      பதித்த சித்திரம்போல்
அவளின் நினைவில் – தினம்
      அலையும்விசித் திரமானேன்

பகல்பொழுதும் பாராது – நான்
      படுத்துறங்கும் வேளையிலும்
நிகழ்பொழுதை மறந்து – நான்
      நெடுநேரம் மனவானில்

ஜோடிப் பறவையாய் – காதல்
      சூடிப் பறந்து
வேடிக்கை விளையாட்டில் – நித்தம்
      வெகுளியாய்த் திரிந்து

வளர்த்துவந்த காதல்பூ – (மண)மாலை
      வரவுகண்டுதன் நிலைமாறி
உலர்ந்து உதிரக்கண்டு – நான்
      உள்ளம் உருகினேனே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக