ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 31 (13.06.2020) - 1

'நுரைக்குமிழிகளில் உடைந்த கனவுகள்'

வெள்ளந்தி மனத்தோடு
வேற்றுமைக ளேதுமின்றி
வெளிப்படையாய்ப் பேசுவோரை
விரோதியாகப் பார்க்கின்ற
கள்ளமனக் கூட்டினிலே
கலையாத வன்மங்கள்
தள்ளாடி நிற்காமல்
தறிகெட்டுப் போனாலும்

நிலையில்லா வாழ்வினையே
நிஜமென்று நம்பியவர்
நிலையான நிம்மதியை
நேர்வழியில் பெற்றிடாமல்
நிலைகொள்ளா கர்வமோடு
நித்தநித்தம் வாழ்ந்தாலும்
உலைவைத்துக் கெடுப்பதையும்
உயர்வாக நினைப்பதுண்டு

நரைப்பருவம் வந்தாலும்
நடைதளர்ந்து போனாலும்
குறைசொல்லும் எண்ணத்தைக்
கொன்றழிக்கா முடியாது
நுரைக்குமிழி வாழ்கின்ற
நொடிப்பொழுது வாழ்வாக
தரையினிலே பதியாத
தடமாக மறைந்திடுவார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக