புதன், 6 மே, 2015

உயர்ந்திருக்கும் நம்தேசம்

இலக்கியங்கள் காட்டுகின்ற
எட்டடுக்கு மாளிகையை
இலக்காகக் கொண்டிங்கு
எழும்பியதோ கட்டடங்கள்

உலகமக்கள் விரும்புகின்ற
உயர்கல்விக் கூடங்களும்
உழைப்பாளர் ஒன்றுகூடி
ஓய்வெடுக்கும் விடுதிகளும்

கட்டிவைத்த கட்டடமாய்க்
கண்ணுக்கு விருந்தாகி
நட்டுவைத்த கொடிமரம்போல்
நாடெங்கும் பரந்திருக்கு

பொட்டுவைத்தப் புள்ளியாக
      புவியினிலே வீற்றிருந்து
கட்டுகோப்பு மாறாமல்
      கவினுருவாய் விளங்குதுபார்

காரிருளும் ஒளிவிளங்க
கண்கவரும் சித்திரமாய்
ஓரிடத்தில் நிலைபெற்று
உயர்ந்திருக்கும் நம்தேசம்

ஊர்க்கூடித் தேரிழுக்க
உலாவரும் உற்சவமாய்
சீரோடும் சிறப்போடும்
      செம்மையுற்று விளங்குதுபார்

                  பொன்.கணேசுகுமார்
                  சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக