புதன், 6 மே, 2015

உதவும் கரங்கள்
உள்ளத்திலே ஒளியிருந்தால்
உதவிடவே வழிபிறக்கும்
நல்லசெயல் நாம்செய்ய
நாளெல்லாம் எண்ணிடுவோம்
கள்ளமில்லா புன்சிரிப்பில்
      காரியங்கள் ஆற்றிடவே
உள்ளமெல்லாம் உவகையோடு
      உன்கரத்தை நீட்டிவிடு
கண்ணிருந்தும் குருடராகக்
      காலமெல்லாம் வாழாமல்
எண்ணிறைந்த உதவிகளை
      இன்பமுடன் செய்துவிடு
பைகொடுத்து பலன்சேர்க்கும்
பாவியாக இல்லாமல்
கைகொடுக்கும் தோழராக
      கடமைதனை ஆற்றிவிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக