புதன், 6 மே, 2015

இனிய வாழ்த்துப் பாடுகின்றோம்!

கன்னித் தமிழாய்க் கவிதைச் சுவையாய்க்
கருத்தில் இணைந்து களிப்புடன் வாழ
எண்ணித் தெளிந்த எழுத்தில் வடித்து
இனிய வாழ்த்துப் பாடு கின்றோம்!
கண்ணின் மணியாய்க் கலையின் வடிவாய்
காட்சியில் திளைத்துக் கனிவுடன் வாழ
கன்னல் மொழியில் கருணை மழையாய்
கவிதை வடித்துப் பாடு கின்றோம்!

பொன்னின் ஒளியாய்ப் பூவின் மணமாய்ப்
புவியில் நிலைத்துப் பொறுப்புடன் வாழ
புன்னகை மழையில் பொழிவுடன் விளங்கும்
புதியத் தமிழில் பாடு கின்றோம்!
மண்ணின் உறமாய் மலையின் திடமாய்
மற்றவர் போற்றும் மதிப்புடன் வாழ
விண்ணில் தோன்றும் வெண்ணிற நிலவின்
வீசும் ஒளியாய்ப் பாடு கின்றோம்!
இனிய வாழ்த்துப் பாடும் உள்ளங்கள்
பொன். சசிகுமார்         – ச. விஜயலட்சுமி
பொன். கணேசுகுமார்      – க. மங்கையர்க்கரசி
பொன். சீவானந்தகுமார்
பொன். கண்ணபிரான்            – க. பாலகவிதா
ச. சமால் முகைதீன்       – ச. மெஹராஜ்பேகம்
வீ. சீனிவாசன்                  – சீ. சந்திரகலா
இரா. பரமசிவம்           – ப. பிச்சைமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக