புதன், 6 மே, 2015

நனிசிறக்க வாழ்த்துகின்றோம்!

அன்போடும் பண்போடும்
      அரவணைக்கும் மனத்தோடும்
அன்றிலைப்போல் வாழ்வதற்கு
      ஆசையோடு காத்திருக்கும்
பெண்ணவளின் கரம்பற்றிப்
      பெருவாழ்வு தொடங்கிடவே
நன்னாளாம் பொன்னாளில்
      நனிசிறக்க வாழ்த்துகின்றோம்!

சொந்தமென்றும் பந்தமென்றும்
      சூழ்ந்திருக்கும் சபையினிலே!
செந்திலவன் கரம்பற்ற 
      சேர்ந்திருக்கும் தேவியவள்
எந்நாளும் இந்நாளாய்
      இனிமையுடன் வாழ்ந்திடவே
செந்தமிழின் துணையோடு
      செம்மாந்து வாழ்த்துகின்றோம்!

இன்றுமுதல் தொடங்குகின்ற
      இல்லறமாம் நல்லறத்தை
ஒன்றிவிட்ட உள்ளத்தில்
      உயிராகப் போற்றிடவும்
பண்பாட்டின் பாதையிலே
பாங்குடனே நடத்திடவும்
நன்றான சொல்கொண்டு
      நன்னாளில் வாழ்த்துகின்றோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக