புதன், 6 மே, 2015

களிப்புக் கொண்டு வாழ்த்துவோம்!

எங்கள் நாடு ஓங்கவே!
எழுச்சிக் கொண்ட சிங்கமே!
சிங்கை நகரை மாற்றியே!
சிறப்புச் செய்தாய் உண்மையே!

மக்கள் மனத்தில் என்றுமே!
மகிழ்ச்சி காண வேண்டியே!
சிக்கல் இல்லா வாழ்க்கையைச்
சீராய் எமக்குத் தந்தியே!

அக்கம் பக்கம் மனிதரும்
அன்பு கொண்டு பழகவே!
மக்கள் கூடும் இடங்களை
மதிப்பாய்க் கட்டச் சொன்னியே!

சீனர் தமிழர் மலாயினர்
சேர்ந்து வாழ வேண்டியே!
வானம் முட்டும் வீட்டினை
வடிக்கச் சொன்னாய் நன்மையே!

அன்று கண்ட கனவினை
அருமை திட்டம் தீட்டியே!
இன்று நினைவாய் ஆக்கிநீ
இன்பம் காணச் செய்தியே!


அன்று செய்த செயலினால்
அறிவு கொண்டோர் யாவரும்
நன்று என்று சொல்லியே!
நாமம் போற்றிப் பாடுவர்

கல்விக் கூடம் யாவிலும்
கன்னித் தமிழைப் படித்திட
நல்லத் திட்டம் தீட்டியே!
நன்மை செய்தாய் என்றுமே!

வெள்ளை உள்ளம் கொண்டநீ
வெற்றியோடு வாழவே!
கள்ளம் இல்லா மனத்துடன்
களிப்புக் கொண்டு வாழ்த்துவோம்.


பொன். கணேசுகுமார் எம். ஏ
சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக