திங்கள், 27 அக்டோபர், 2025

 

எதை நான் கேட்பின்” – ஜூலை 2025 - 302

(அறுசீர் விருத்தம்) இரண்டாம் பரிசு

 

இன்புறும் உள்ளம் தன்னில்

எழுந்திடும் எண்ணம் கொண்டு

புன்னகை பூக்கும் வண்ணம்

பொலிவினைக் காட்டும் பெண்ணே

என்னிடம் காதல் கொண்டு

எழிலுறச் செய்யும் நாளில்

உன்னிடம் எதைநான் கேட்பின்?

உறவினை மேன்மை செய்வாய்.

 

வியப்புறும் விந்தை தன்னை

விழியிலே ஒளித்து வைத்து

இயல்புடன் பார்க்கும் பார்வை

இன்முகம் எடுத்துக் காட்ட

நயம்பட நவிழும் வார்த்தை

நறுமணம் கொள்ளச் செய்து

இயங்கிடும் வேளை தன்னில்

எதைநான் கேட்பின்? ஈவாய்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக