“அழகின் வயது அறுபது” – ஆகஸ்ட்டு 2025 - 303
(எண்சீர்
விருத்தம்) முதல் பரிசு
ஆயிரத்துத்
தொள்ளாயி ரத்தறுபத் தைந்தில்
அச்சமின்றி
அடியெடுத்து வைத்தவளே! சிங்கைப்
பாயிரத்தில்
பழங்கதையை விட்டொழித்து நீயும்
பல்லினத்தின் ஒற்றுமைதனை முதலீடாய்க்
கொண்டாய்!
கோயிலெனக்
கொள்வோர்க்குக் கோபுரமாய் நின்று
குறையில்லாப்
பேரொளியில் பேதமையைத் தீர்த்தாய்!
வாயிலென
நுழைந்தோர்க்கு நல்வழியென வந்து
வருமையில்லா
வாழ்வுதனை வண்ணமுடன் தந்தாய்!
அளவில்லா
முதலீடை அங்கமெல்லாம் பூட்டி
அவணியிலே அனைவருக்கும் அடைக்கலம்தான்
தந்தாய்!
வளம்கொழிக்கும்
வர்த்தகத்தில் வானளவாய் உயர்ந்து
வந்தோர்க்கும்
சென்றோர்க்கும் நிழல்மரமாய் நின்றாய்!
உளம்மகிழ
உலாவருவோர் உன்னழகைக் கண்டு
உரைப்பதற்கு
வார்த்தையின்றி ஊமையென நிற்க
விளம்பரங்கள் உன்னகவை அறுபதென்று சொல்லி
விதவிதமாய்க்
கொட்டிடுதே வாழ்த்துகளை அள்ளி.
கணேசுகுமார்
பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக