திங்கள், 27 அக்டோபர், 2025

 

அப்பா” – ஜூன் 2025 - 301

                              (வெண்பா)

இல்லறத்தின் மாண்புதனைக் கொண்டொழுகி வாழ்ந்தாலும்

சொல்லுகின்ற சொல்லிலும் செய்யும் செயலிலும்

நல்லறத்தை யுட்புகுத்தி நாளைய சந்ததிக்கும்

நல்வினை யாற்றுவார் காண்!

 

நெடுங்கால மாற்றும் பணியினை யேற்றுக்

கடுந்துயர் கொள்வதற்கு நேர்ந்தாலும் நெஞ்சம்

படும்பாட்டை யின்னலென எண்ணாது நாளும்

துடிப்புட னாற்றுவார் காண்!

 

தனித்துவத்தின் தன்மையிலே பண்புகளைக் கொண்டு

கனிவோடு கண்டிப்பும் காட்டுகின்ற போதும்

பனிபோன்ற பார்வையாலே மென்மையினைக் கூட்டி

இனிதெனவே வாழ்ந்திடுவார் காண்!

 

தோள்நோகத் தூக்கித் தொலைதூரம் சென்றாலும்

கோள்சுழலும் வித்தையினால் பூமி நிலைமாறி

வாள்சுழன்ற வீரக் கதைகளைக் காட்சியாக (யாக்கி)

நாள்தோறும் சொல்லிடுவார் கேள்!

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக