திங்கள், 27 அக்டோபர், 2025

 

அழகின் வயது அறுபது

(வெண்பா)

அறுபத்து ஐந்தில் அடியெடுத்து வைத்து

இருபத்து ஐந்தில் மணிவிழா வென்னும்

பெருமைமிகு பேற்றியினைப் பெற்றவளே! சிங்கைப்

பெருமகளே! வாழ்கவாழ்க வே!

 

(அறுசீர் விருத்தம்)

மழலை கொண்ட உன்னுருவம்

                              மறைந்தும் மறையா பருவமுடன்  

நிழலாய்த் தொடர்ந்து வந்தாலும்

                              நித்தம் எமக்கு உயர்வூட்டும்

பழக்கம் தன்னை மாற்றாமல்

                              பணிவைப் பண்பாய்க் கொண்டிலங்கும்

அழகின் அகவை அறுபதென்று

                              ஆசை யோடு ஆர்ப்பரிப்போம்

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக