திங்கள், 27 அக்டோபர், 2025

 

பாடல் (சுப அருணாச்சலம்)

மயிலன்ன வண்ணத்தை மடிதன்னிலே பெற்றவளே!

மங்கலம்பொலியும் மகிழ்வோடு மணிவிழாவும் கண்டவளே!

கயலாடும் கடலினையும் காவலரணாய்க் கொண்டவளே!

கடமைகண்ணியம் கட்டுப்பாடெனக் கருத்தினில் வாழ்பவளே!  

சுயமென்னும் முகவரியில் சோம்பலையும் முறித்தவளே!

சுப அருணாவின் வாழ்த்தினையும் சுகமாக ரசித்தவளே!

 

நானிலங்கள் போற்றுகின்ற நாளும்வளர் சிங்கைத்தாயே!

நற்றமிழால் பாடுகின்றேன் நலம்புரிவாய் என்றும்நீயே!

வானிருந்து மின்னுகின்ற வண்ணவண்ண மின்மினிபோல்

வையகத்தின் தென்கிழக்கில் ஒளிர்கின்ற கண்மணியே!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக