“நிலந்தொடும் மழை” – நவம்பர் 2024
ஆறு குட்டை குளமென்றும்
ஆழி
சூழ்ந்த பரப்பென்றும்
கூறு பட்டுக் கிடக்கின்ற
குவல
யமென்னும் நிலப்பரப்பில்
வேறு பாடு பார்க்காமல்
வெய்யோன்
உறிஞ்சும் நீரெல்லாம்
மாறு பட்ட மேகமென
மெல்ல
வானம் சென்றாலும்
சோறு போடும் உழவனவன்
சொந்த
வுழைப்பில் பயிர்செய்து
பேறு செய்யும் நோக்கத்தில்
பெரிய
மழையாய்ப் பெய்யுமுன்னே
மீறு கின்ற வளிப்பட்டு
மின்ன
லிடியாய் ஒலியெழுப்பி
தூறு கின்ற தூவானம்
துளித்து
ளியாக நிலந்தொடுமே
திரு கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக