பனிப் படரும்
நினைவு – டிசம்பர் 2024
தொன்மையெனத்
தொல்லியளார் கூறு கின்ற
தமிழர்தம்
மரபோடு நற்பண் பாடும்
தொன்றுதொட்டுத்
துலங்கினாலும் தூய்மை யோடு
தொடருகின்ற
நினைவுகளும் பனியாய் மாறி
இன்றுபோல
இணக்கமுடன் மகிழ்ந்து வாழும்
எண்ணத்தை
வளர்க்கின்ற இதயம் தன்னில்
முன்னோரின்
முதுசொல்லும் முதன்மை பெற்று
முன்னேற்றப்
பாதையிலே கொண்டு செல்லும்
உள்ளமதில்
உருக்கொண்ட ஆசை யெல்லாம்
ஊணுடம்பாய்
உருவெடுத்து உளலும் போது
வெள்ளமென
வீறுகொண்டு விரைவு கின்ற
வீணான வார்த்தைகளை
விட்டொ ழித்து
கள்ளமில்லா
வெள்ளைமனம் கொண்டோர் முன்னே
கயமையின்றி
வாழ்வதற்குக் எண்ணம் கொண்டு
பிள்ளைமொழி
மழலையாலே நீயும் செப்ப
பனிப்படரும்
நினைவுகளாய்க் கண்முன் தோன்றும்
திரு கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக