ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"விதியின் விதிகள்"

சொற்போரில் சோராத
சுரணையுள்ள செந்தமிழர்
மற்போரில் மாண்டாலும்
மறப்போரில் வீழ்ந்தாலும்
தற்காக்கும் எண்ணத்தில்
தலைவிதியின் எழுத்தென்று 
ஒருபோதும் சொன்னதில்லை
உரைவழியும் எழுதவில்லை

உதிக்கின்ற உள்ளுணர்வின்
உண்மையினை உணராது
மதிகூறும் மாற்றத்தை
மனமேற்கச் செய்திடவே
சதிசெய்யும் சண்டாளர்
சாதகத்தின் துணைகொண்டு
விதிசெய்யும் வேலையென
வெறும்கூச்சல் செய்திடுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக