வியாழன், 11 ஏப்ரல், 2019


சிங்கைத் தாய் தாலாட்டு

ஆராரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

கண்ணேயென் கண்மணியே
கற்பகமே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆராரோ...

நம்மகதை நல்லகதை
நீயறிய ஏற்றகதை
வம்புதும்பு செய்யாம
வக்கனையா கேளுகண்ணே

சங்நீல உத்தமனாம்
சமர்செயலில் வல்லவனாம்
சிங்கமென்னும் பேருருவை
சமுத்ரத்தில் கண்டவனாம்

ஆராரோ ஆராரோ...

தங்கநிகர் பொன்னுருவை
தரணியிலே வெளிக்காட்ட
சிங்கபுரா என்னும்பேர்
சிதையாமல் வைத்தவனாம்

பங்கமில்லா பாசமோடும்
பால்நிலவின் ஒளியோடும்
சிங்கையென்னும் நம்நாட்டை
சிறப்புடனே ஆண்டவனாம்

ஆராரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

கண்ணேயென் கண்மணியே
கற்பகமே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக