ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"இந்தக் கவிதைக்கு அதிகாரப்பூர்வ ஆதரவாளர்கள்"

இலக்கண மரபு கொண்டு
இயற்றிய இனிய கவியும்
இலக்கண மரபு மீறி
இயற்றிய புதுமை கவியும்
விளக்கிடும் கருத்தைக் கொண்டே
வேண்டுவோர் நெஞ்சி லென்றும்
இலக்கினைச் சுட்டிச் சென்று
இலக்கியச் சான்றாய் விளங்கும்

சிக்கலின் தன்மை யறிந்து
சிறப்புடன் சேவை செய்யும்
மக்களின் தேவை வேண்டி
மழைதரும் பயன்கள் போலே
பயிர்களின் பசுமை வேண்டி
பாய்ந்திடும் ஆற்று நீர்போல்
உயிர்களின் உள்ளம் நாடும்
உயரிய படைப்பே கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக