ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"ஓ மனமே"

மனமே மனமே தளராதே
மதிதான் இருக்கு மயங்காதே
தினமே தினமே நகராதே
திரும்ப இந்நாள் வாராதே
பணமே பணமே உன்னாலே
பந்த பாசம் காணோமே
குணமே குணமே எந்நாளும்
கனிவாய் இருக்க முடியாதோ

வாழ்வே வளமே பெருகாயோ
வறியோர் நலத்தை நான்பேண
ஏழ்மை நிலையில் நீவந்தால்
என்னைச் சுற்றி யார்வருவர்
ஊழின் பிறப்பாய் நீயிருந்தால்
உன்னைச் சுற்றி் யாரிருப்பார்
வாழ்வின் ஒளியாய் வழங்கிடவே
வருவாய் வளர்வாய் தினம்தினமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக