வியாழன், 11 ஏப்ரல், 2019

      நான் நோக்கும் காலை

பள்ளி செல்லும் பிள்ளைகளும்
           பணிக்கு விரையும் பாமரரும்
உள்ளம் முழுதும் ஒருநினைவாய்
           ஓடும் இந்தப் பரபரப்பில்
நல்லோர் தீயோர் பாராது
            நகர்ந்து செல்லும் நாளேட்டில்
கள்ள மில்லா புன்சிரிப்பாய்க்
            கலைந்து போகும் கடிகாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக