வியாழன், 11 ஏப்ரல், 2019

சீறிச்சென்ற வெளிச்சத்தில் வான்வண்ணம்

காற்றடைத்த பையொன்று
           காலத்தின் கோலத்தால்
நாற்றுக்கு எறுவாகி
           நற்கதிகள் பெற்றிடவே
ஏற்றிவிட்ட ஏணிகளை
           இதயத்தில் கொழுவைத்து
மாற்றமில்லா மகிழ்வோடு
           மனமுருக வேண்டாமல்

பாரிலுள்ள படைப்புகளைப்
           பரிவின்றிச் சிதைப்பதாலும்
ஊரிலுள்ளோர் அனைவருமே
          உண்மையற்று கிடப்பதாலும்
ஏறிவந்த ஏணியென்று
          எண்ணாமல் விட்டதாலும்
சீறிச்சென்ற வெளிச்சத்தில்
          சிதறிடுதே வான்வண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக